2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் இலங்கை!

நடப்பு ஆண்டுக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமத்தை, இலங்கை பெற்றுள்ளது.

ஆசியக் கிரிக்கெட் சபையால் இந்த அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 11ஆம் திகதி வரை ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *