
கொழும்பு, மார்ச் 19
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட மட்டத்திலான அரச எதிர்ப்பு நடவடிக்கை விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி மொனறாகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இம்மாதத்துக்குள் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னர் கடந்த 15 ஆம் திகதி சஜித் அணியினர் பாரியதொரு போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.