
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும் நிலையில், புத்தர் சிலை அமைப்பது தற்போது அவசியமானதா என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் யாழ்ப்பணத்திற்கு வருகை தந்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கடந்த புதன்கிழமை மக்கள் மத்தியில் ஆற்றிய உரை, மக்களிடம் 2 ஆண்டுகளை தருமாறு கெஞ்சிக்கேட்டதாக விமர்சித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அயல் நாடுகளிடம் பிச்சைப் பாத்திரத்துடன், பிச்சை எடுப்பதாகவும், நாமல் நீர் விளையாட்டில் குதூகலித்ததாகவும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.
இவ் ஆட்சியாளர்களை ஆட்சிப்பீடத்திலிருந்து அகற்றினால் மட்டுமே நாட்டிற்கு விமோட்சனம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
கந்தரோடையில் புதிதாக புத்தர்சிலை அமைக்கவுள்ளதாக தகவல் அறிந்து நேற்றைய தினம் சுமந்திரன் எம்.பி. நேரில் சென்று பார்விட்டமை குறிப்பிடத்தக்கது.