சப்புகஸ்கந்த மூடப்பட்டால் நாட்டில் நெருக்கடி இன்னும் அதிகரிக்கும்! ஆனந்த பாலித

சப்புகஸ்கந்த மூடப்படுவதால் நாட்டில் அதிக மின்வெட்டு மற்றும் எரிபொருளுக்காக அதிக வரிசைகள் ஏற்படும் என ஐக்கிய தொழிற்சங்கப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய் இல்லாமையால் நாளை முதல் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.

இதற்கு முன்னரும் மசகு எண்ணெய் கிடைக்காமையால் முன்னரும் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதனால் நாட்டுக்கு டொலர்களை ஈட்டக்கூடிய கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படுவதுடன் நாட்டில் மின்வெட்டு இன்னும் அதிகமாகும் அத்துடன் எரிபொருளிற்கான வரிசைகள் இன்னும் பெரிதாகும் என ஆனந்த பாலித ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

அரச தலைவர் ஒரு குழுவொன்றை இப்போதே நியமித்து, எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விநியோகம் மற்றும் உற்பத்தி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *