
மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்த நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், கண்டி-எல்லேபொல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக குறித்த நபர் வரிசையில் காத்திருந்த போதே திடீரென கீழே விழுந்துள்ளார்.
71 வயதுடைய நபரொருவரை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.