நாட்டில் கொரோனா முற்றாக ஒழிக்கப்படவில்லை! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

அரச தகவல் திணைக்களம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 16, 426 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் கொரோனா எனும் நோய் நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்படவில்லை.

ஆகையால், மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் பதுவன்துதாவ குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *