விமல் கம்மன்பில வாசுவின் இரகசிய நோக்கங்களை அம்பலமாக்கிய ஹிருணிகா

விமல்வவீரவன்ச உதயகம்மன்பில வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் நடவடிக்கைகளின் பின்னால் இரகசிய நோக்கங்கள் உள்ளன என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ராஜபக்ச குடும்பத்தின் இன்னொரு உறுப்பினர் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்ய முயல்கின்றனர்.

இந்த மூவரினதும் கடந்தகாலங்களை ஆராயும்போது அவர்கள் மக்கள் தங்களிற்கு வழங்கிய ஆணையை காப்பாற்ற முயல்கின்றனர்.

அதன்படி, நிதியமைச்சருக்கு எதிரான இன்னொரு உறுப்பினருக்கு உதவ முயல்கின்றனர் என்பது தெளிவாகின்றது – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *