மின்சாரக் கட்டண அதிகரிப்பை நிறுத்தக்கோரி, தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு முன்பாக தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மின் பாவனையாளர்கள் சங்கம் இதனை இன்று (19) மாலை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது கையில் தீப்பந்தந்தை ஏற்றியவாறு, மின் கட்டணத்தை குறை, மின் கட்டண அதிகரிப்பை நிறுத்து உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மின் பாவனை அதிகரிப்பு டீசல் எரிபொருள் அடிக்கடி மின் வெட்டு இவ்வாறு போனால் எங்களதும் விவசாயிகளினதும் நிலை என்னவாகும்.
நாளாந்தம் அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றமும் சாதாரண பொது மக்கள் உட்பட அனைவரையும் பாதிக்க வைத்துள்ளது.
மின்சார கட்டணத்தை குறைக்கவும் மின் கட்டண அதிகரிப்பையும் குறைக்குமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றனர்.


