பிரதமரின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு – மட்டுவில் பகுதிக்கு மாற்றப்பட ஆர்ப்பாட்டம்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நல்லூரில் ஏற்பாடாகியிருந்த போராட்டம் மட்டுவில் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னர் நல்லூரில் காலை 10 மணிக்கு என ஏற்பாடகியிருந்த போராட்டம்,
தற்போது மட்டுவில் வண்ணாத்திப்பாலம் பகுதியில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலைய முன்றலில் காலை 9 மணிக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலை மாணவர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *