எரிபொருள் வரிசையில் நின்ற முதியவர் சாவு!

கண்டியில் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

முதியவர் சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கண்டி உடதலவின்ன வத்தேகம பகுதியைச் சேர்ந்த 70 வயதானவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதியவர் மயங்கி விழுந்த வேளையில் அவரை மருத்துவமனையில் சேர்க்க எரிபொருள் நிரப்பு நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *