
இரத்தினபுரி -அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் இருவேறு பிரதேசங்களில் உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டுன் இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக, இரத்தினபுரி கொடக்கவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலக்கபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், உள்நாட்டு துப்பாக்கியுடன் 45 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பல்லேபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அனுராதபுரம் கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்மல்கந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.