இலங்கையின் எந்தவொரு நிகழ்விலும் மோடி கலந்துகொள்ள மாட்டார்?

இலங்கையில் இடம்பெறும் எந்த நிகழ்விலும் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள மாட்டார் எனத் திடமாகத் தெரிய வருகின்றது.

கொழும்பில் இடம்பெறும் பிம்ஸ்டெக் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி வருகை தருவார் எனவும் அதனை அடுத்து இம்மாதம் இறுதி தினத்தில் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தருவதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனை ஆராய்ந்த நிலமையில் இலங்கையில் இடம்பெறும் மாநாட்டில் இந்தியப் பிரதமர் சூம் வழியாகவே உரையாற்றவுள்ளார் என்பது அறிய முடிந்தது.

இதேநேரம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத் திறப்பு விழாக்களில் கலந்துகொள்ளவுள்ளதான தகவல்கள் பொய்யானவை எனவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *