
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த 70 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்றையதினம் கண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான முதியவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.