மக்கள் பட்டினியில் – அமைச்சர் நாமல் தண்ணீரில்..! ஜே.வி.பி குற்றச்சாட்டு

நாட்டு மக்கள் பட்டினியில் இங்கே வாடும் போது அமைச்சர் நாமல் மாலைதீவில் உல்லாசமாக இருப்பது,அவர் மக்கள் மீது கொண்ட அக்கறை தெரிகிறது என ஜே.வி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றினார்.

அது ‘பழைய கிழவி கதவ திறடி’ என்பது போல பழைய வாத்தியங்களையே பாடியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் கொரோனா கொரோனா என காரணம் காட்டும் அப்பாவி தனமான பேச்சையே அவரிடம் காண முடிந்தது.

நாட்டிற்கு வரும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமது பலவீனத்தை மறைக்க முன்பு இருந்த ஆட்சி மீதே குற்றம் சாட்டுகின்றனர். ஜனாதிபதியின் பேச்சும் அவ்வாறே.

நாட்டில் எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எரிபொருள், எரிவாயு பிரச்சனைகள் படுமோசமாக உள்ளது.

40 லட்சம் கல்வி மாணவர்கள் இருக்கின்ற நமது நாட்டிலே, வினா தாள்களை பெறுவதற்காக வரிசையில் நின்றாலும் ஆச்சரியம் இல்லை.

மருந்துப் பொருட்களின் விலைகள் என்பது அதிகரித்து காணப்படுகின்றது.

மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த தற்போது மூடப்பட்டு காணப்படுகிறது.

எல்லா பிரச்சினையை தீர்ப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது இரண்டு வருடம் கடந்த பின்பும் அவர்களால் அதை செய்ய முடியவில்லை.

நமது நாட்டையும் விட இந்தியா, பங்களாதேஸ், மலேசியா போன்ற நாடுகள் அணியச்செலாவணி கையில் வைத்திருப்பதாக காணப்படுகிறது. பண வீக்கமும் குறைவு.

ஆனால் எங்களுடைய நாட்டில் பண வீக்கம் 30 வீதம் ரூபாவின் மதிப்பு இரக்கம் ஏற்பட்டுள்ளது. அது மேலும் உக்கிரம் அடையும் வகையில் டொலரின் பெறுமதியை கூட்டி உள்ளனர்.

இதனால் கோட்டா ஆட்சியை முற்றாக நிராகரிக்கும் வகையில் மக்கள் ‘கோட்டா கோ’ என்று போராட்டம் வெடித்துள்ளது.

இவர்கள் ஆட்சிக்கு வரும் போது எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பதாகவே கூறி வந்தனர்.

இலங்கை சுகந்திரம் அடைந்த 74 வருடங்களில் இவ்வாறான பஞ்சம் ஏற்படவில்லை.

இதனால் இலங்கை மக்கள் கோட்டாவின் தந்தை தாயை பெயர் சொல்லி அழைக்கின்றனர்.

எனினும் எவ்வித உணர்வுகளும் இன்றி யடமாக காணப்படுகின்றனர்.

நாட்டு மக்கள் பசியில் வரிசையில் நிக்க நாமல் மாலைத்தீவில் நீரில் விளையாடுகிறார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *