புத்தளம் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டு தப்போவ சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது.
புத்தளம் பாவட்டமடு பகுதியில் மலைப்பாம்பு ஒன்று வீட்டுத் தோட்டத்திற்குள் புகுந்துள்ளதை அவதானித்த அப்பகுதி மக்கள் புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் மலைப்பாம்பை பாரிய சிறமத்திற்கு மத்தியில் உயிருடன் பிடித்துள்ளனர்.
பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை தப்போவ சரணாலயத்தில் விடுவித்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த மலைப்பாம்பு 7 அடி நீளமுடையது எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
