நாட்டில் மேலும் 180 கொவ மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தோரில் 97 ஆண்களும், 83 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.