இலங்கையில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ரஷ்யப் பெண்

காலி -அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய பெண் ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 38 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், இடதுபுறம் இருந்து மணல் லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது, மணல் லொறியுடன் மோதி, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *