
கீவ், மார்ச் 21
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, கடந்த மாதம் 24 ஆம் தேதி அந்நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 25-வது நாளை எட்டியுள்ளது.
உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா, தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்ற முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் கடுமையாக எதிர்த்து போராடுவதால், ரஷ்ய வீரர்களால் எளிதில் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை.
இதனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணை போன்றவை மூலமும் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை நிலை குலைய வைத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், அது மூன்றாம் உலகப் போராக மாறும். கடந்த 2 ஆண்டுகளாகவே நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன். ஆனால், பேச்சுவார்த்தையின்றி இந்தப் போரை நம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியாது” என்றார்.