முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் பஸ் விபத்து : ஒருவர் பலி, 21 பேர் காயம்

முல்லைத்தீவு,மார்ச் 21

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதுடன்  6 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வழித் தடத்தில் பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பஸ், வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் சுமார் 40 க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில் 21 பேர் படுகாயம் அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *