இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நாட்டு மக்களுக்கானது – இம்ரான் கான்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நாட்டு மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “எப்போதும் தனிப்பட்ட வெளியுறவு கொள்கையை பின்பற்றுவதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன்.

இந்தியா தற்போது அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜப்பான் அடங்கிய குவாட் அமைப்பிலும் இந்தியா உள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக மூன்று தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில், பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி இருந்தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்வனவு செய்துள்ளது.

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.இதற்கு காரணம் நாட்டு மக்களின் நலனுக்கானதாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *