
கொழும்பு, மார்ச் 21: சர்வதேச அழைப்புகளுக்கான தொலைபேசிக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.