மேல் மாகாணத்தில் தவணைப் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானம்

மேல் மாகாணத்தில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடதாசி தட்டுப்பாடு காரணமாக ஒத்திவைக்கப்படவிருந்த மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகளை மீண்டும் நடத்துவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, தரம் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் இன்று (21) முதல் வழமை போன்று நடைபெறும் என்று கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகளை தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தவணைப் பரீட்சைகள் திட்டமிட்ட அட்டவணையின்படி மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *