பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தயம்: சார்லஸ் லெக்லெர்க் சம்பியன்!

பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தய சுற்றில், பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ‘பார்முயுலா 1’ கார் பந்தயத் தொடர், 23 சுற்றுகளாக ஒவ்வொரு நாடுகளில் நடைபெறுகின்றது.

இதன்படி, நடப்பு ஆண்டின் முதல் சுற்றான பஹ்ரைன் பர்முயுலா-1 கார்பந்தயம், நேற்று பஹ்ரைன் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.238 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 37 நிமிடங்கள் 33.584 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 26 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 5.598 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, பெர்ராரி அணியின் கார்லோஸ் செய்ன்ஸ் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

9.675 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன், மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின் இரண்டாவது சுற்றான சவுதி அரேபியா கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 27ஆம் திகதி ஜெடா கார்னிச் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *