கந்தளாயில் 4,5000 தொன் நெல் மூடைகளை பதுக்கிய களஞ்சிய சாலைகளுக்கு சீல்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4,5000 தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சிய சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் இன்று(7) கந்தளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது மூன்று நெல் களஞ்சிய சாலைகளில் 4,5000 தொன் நெல்மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நெல் களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் திருகோணமலை பணிப்பாளர் கே.டி வசந்தன் தெரிவித்தார்.

சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பொலிஸாரும் ஈடுபட்டதோடு,பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் கே.டி வசந்தன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *