ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்கிறாரா கோட்டாபய…! ஜனாதிபதி ஊடகப் பேச்சாளரின் தகவல்

பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசித்து வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அறிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றன.

எனினும் இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. இது போன்றதொரு நெருக்கடியான சூழ்நிலையில் தப்பிச் செல்லும் நபர் ஜனாதிபதி அல்ல.

தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுத்து வருகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஆளும் கூட்டணி கட்சிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.

இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்டாயம் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *