பொரளை கைக்குண்டு விவகாரம்: ஓய்வுபெற்ற வைத்தியருக்கு பிணை

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

100,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனவரி 11ஆம் திகதி பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கின் மற்றைய இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *