
கொழும்பு, மார்ச் 21
சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இது வெறும் ஊடக கண்காட்சியெனவும் பிரச்சினைகளை தீர்க்கும் உண்மையான நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி தாம் ஏன் மாநாட்டை புறக்கணித்தோம் என்பது குறித்த விரிவான ஒரு அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.