
சந்தையில் முகக்கவசங்களுக்கானவிலை இன்று முதல் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விதுர அல்கம தெரிவித்தார்.
முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாகவும், டொலர் பெறுமதி அதிகரிப்புக் காரணமாகவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.