தெற்கிலிருந்து வடக்கிற்கு கொண்டுவந்து விடப்படும் யானைகள்

தென்னிலங்கையில் இருந்து வடங்கில் உள்ள தமிழர்கள் பிரதேசத்தில் விடப்பட்டுள்ளகாட்டு யானைகளினால் பெருமளவு சேதங்கள் ஏற்படுவதாக கட்டையடம்பன் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ள யானை ஒன்று கடந்தசில தினங்களுக்கு முன்னர் கட்டையடம்பன் பகுதியுள்ள வீட்டிற்குள்ள புகுந்து மூன்று பிள்ளைகளின் தாயொருவரை அடித்து கொன்றது.

அதேயானை கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கற்கிடந்தகுளம் பகுதியில் ஒருவரை கொன்றதுடன் அப்பகுதி கிராமங்களில் மேற்கொள்ளப்படும் மேட்டுநிலப்பயிர்களையும் விவசாய நிலங்களையும் அழத்து நாசம் செய்து வருகின்றது.

எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்குமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *