
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த வாரம் அதிகரித்துக் காணப்பட்ட மரக்கறிகளின் மொத்த விலை, நேற்றுக் காலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறிகள் வாங்க வரும் வியாபாரிகள் வருகை தராததும், எரிபொருள் தட்டுப்பாடுமே மரக்கறிகளின் விலை வீழ்ச்சி மற்றும் விற்பனையின்மைக்கு முக்கிய காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.