அரசியலில் ஈடுபடும் தரப்பினர் மக்களின் சுமையை குறைக்க விரும்புவதில்லை! ஐ.தே.கட்சி குற்றச்சாட்டு

நாட்டின் தற்போதைய சூழலில் அரசியலில் ஈடுபடும் தரப்பினர் மக்களின் சுமையை குறைக்க விரும்புவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தற்போதய பிரச்சினைகளை அரசியல் மயமாக்கும் செயற்பாடுகளை நிராகரிப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விரிவான வேலைத் திட்டத்தின் மூலமே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் செயற்படும் பட்சத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையும்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரினால் நிதி நெருக்கடியை தீர்த்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *