பட்டதாரி ஆசிரிய பயிலுனர்களுக்கான வயதெல்லையை அதிகரியுங்களென பட்டதாரி பயிலுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரிய பயிலுனர்களாக புரியும் இவர்களை தற்போது நிரந்தர நியமனத்தில் இணைக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இவ்வாறு நிரந்தர நியமனத்துக்கு உள்ளீர்க்கும் போது வயது எல்லை 35 என குறிப்பிட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே இந்த வயதெல்லையை 45 ஆக உயர்த்தி அனைவரையும் நிரந்தர சேவையில் உள்ளீர்க்க வழி செய்யுமாறு கோரி இந்த மஹயர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மஹயரை பெற்றுக்கொண்ட மாகாண பிரதிப் பிரதம செயலர்,இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும்,அணைத்து பயிலுனர்களின் விபரங்களையும் தருமாறும் கோரியுள்ளார்.
