மோ.சைக்கிள் விபத்தில் ஒருவர் சாவு மற்றொருவர் காயம்!

மூளாயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்று இரவு மூளாய் – மாவடி வீதி
காளி கோயிலுக்கு அருகில் இடம்பெற்றது.

குறித்த இடத்தில் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் உள்ள விற்பனை நிலையத்தில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் கருங்காலியை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது-49) என்பவராவார்.

அத்துடன் காயமடைந்தவர் யாழ். பல்கலைக்கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் ஆவார். காயமடைந்தவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *