அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் இலங்கை வருகை

கொழும்பு, மார்ச் 21

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூன்று உயர்மட்ட அதிகாரிகள் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் விக்டோரியா நுலண்ட், பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணைச் செயலாளர் அமண்டா ஜே. டோரி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ ஆகிய மூவருமே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

அதேவேளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் விக்டோரியா நுலண்ட் தலைமையிலான தூதுக் குழுவொன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை பங்களாதேஷ்,இந்தியா மற்றும் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளது.

இலங்கைக்கான விஜயத்தின் போது இவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன் பல்வேறு அரசியல் தரப்பினரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *