பொலிசாரின் காட்டுமிராண்டி தாக்குதலால் வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் தாய்மார்

யாழிற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் மகிந்த ராஜ பக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மட்டுவில் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டுவில் வண்ணாத்திப்பாலம் பொருளாதார மத்திய நிலையம் முன்பாக போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்ட பேரணி ஆரம்பமாகி முன்னோக்கி நகர்ந்து செல்கையில், பொலிஸார் உட்பட படையினர் போராட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

இதன் போது தடி அடி நடத்த முற்பட்ட நிலையில், அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களின் தலை முடியில் பிடித்து இழுத்து சென்றனர்.

பொலிசாரின் தாக்குதல்களின் காரணமாக சேலை, சட்டைகள் கிழிந்த நிலையில் தாய்மார் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி, வயோதிபத் தாய்மார் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டு, தடியடிப்பிரயோகம் மற்றும் கட்டைகளாலும் அடிக்கப்பட்டு கெட்ட வார்த்தைகளாலும் நிந்திக்கப்பட்டனர்.

இவ்வாறான நிலையில்,போராட்டத்தில் காயமடைந்த தாய்மார் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *