மகிந்தவுக்கு தெரியாத போராட்டம் இல்லை – சி.வி.கெ சிவஞானம் சாடல்

யாழ் மட்டுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற பொலிஸாரின் அநாகரிகச் செயல் கண்டிக்கத்தக்கது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கெ.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்தராஜபக்சவின் வருகை வேதனை மற்றும் கண்டனத்துக்குரிய நாளாக மாறிவிட்டது. ஒரு ஜனநாயக நாட்டில் பிரதமரிடம் தமது குறைகளை சொல்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள்அல்ல.அதுவும் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் மன்னிக்க முடியாதது.

பொலிஸார் சட்ட ஒழுங்கை காப்பற்றலாம் அதில் எந்த பிரச்சினையும் இல்லை.ஆனால் பெண்களை அநாகரிகமாக நடாத்தி வாகனங்களுக்குள்ளே அடைத்து வைத்து கொடுமை செய்துள்ளனர். இந்த செயல் ரஸ்யா மற்றும் உக்கிரைனில் இப்போது நடக்கும் அநாகரிக செயற்பாட்டுக்கு ஒப்பானதாக கூறலாம். இதனை நாம் கண்டிக்கின்றோம்.

முன்னர் எதிர்க்கட்சியில் மகிந்த ராஜபக்ச இருக்கும் போது பல போராட்டங்களை நடாத்தியுள்ளார். அவருக்கு தெரியும் போராட்டம் என்றால் என்னவென்று.அவரே இந்த செயலை பார்த்துக்கொண்டு இருந்தது வேதனைக்குரியது , கண்டிக்கத்தக்கது. – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *