
யாழ்ப்பாணத்தில் நேற்று பெண்களுக்கு இடம்பெற்ற கொடூர செயலுக்கு இதுவரை எந்த பெண்கள் அமைப்பும் கண்டனம் செலுத்தவில்லை என்பது வேதனை தருகிறது என வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரசிடமும் ,வெளிநாட்டு நிறுவனங்களிடமும் பணத்தை பெற்று மக்களின் நியாயமான போராட்டங்களை குழப்புவதற்கு பலர் இப்போது உள்ளனர்.
பொது அமைப்புகளும் உள்ளன.
சில நேர்மையான அமைப்புகளும் உள்ளது என நாம் நம்புகிறோம்.
இவ்வாறு பெண்களுக்காக செயற்படுகின்றோம் என்று கூறிக்கொண்டு இருக்கும் எந்தவொரு அமைப்பாவது நேற்று தாய்மாருக்கு நடந்த கொடூரம் பற்றி குரல் கொடுத்து இருக்கிறார்களாக ?
75 வயது மூதாட்டி உட்பட பலர் நேற்று பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளனர்.
பணத்தை பெறுவதற்கும்,பிரபல்யம் தேடுவதற்காக மட்டுமா நீங்கள் அமைப்பை நடாத்துகிறீர்கள்.
என்ன தேவைக்காக உங்கள் அமைப்பை நடாத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.
நேற்று இவ்வளவு கொடூரம் நடந்துள்ளது.ஒரு சில கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு போனீர்கள்.
ஆனால் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எங்கே சென்றது.
ஜனாதிபதியை சந்திக்க இருக்கும் ஆர்வத்தில் அவர்களை காணவில்லை என்று நினைக்கின்றேன்.
ஒரு கண்டன அறிக்கையை கூட இன்னமும் வெளியிடவில்லை.சூடு சுறணை இல்லை அவர்களுக்கு.
நீங்கள் ஜனாதிபதியை சந்திக்க செல்வது மக்களுக்காக இல்லை. இது கடந்த கால பாடங்களில் இருந்து நாம் தெரிந்து கொண்டது.
தமிழ் மக்களுக்கு தீபாவளிக்கு தீர்வு எண்டு சொல்லி மக்களை ஏமாற்றியவர்கள் தான் இவர்கள்.
சிங்கள பெண்கள் அமைப்புகளும் இது பற்றி அக்கறை கொள்ளவில்லை என்றார்.