
சீனாவில் 133 பயணிகளுடன் பயணித்த சைனா ஈஸ்டர்ன் எயார் லைன்ஸ் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் விழுந்து நொறுங்கியதால் மலைப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர். விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.