சீனாவில் 133 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து!

தென்மேற்கு சீனாவில் 133 பேரை ஏற்றிச் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற சைனா ஈஸ்டர்ன் விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணிக்கு புறப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.

விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை என்றும் மாகாண அவசர மேலாண்மை பணியகத்தை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனமான சிசிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புற மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *