தண்ணீர்க் ‘கானுக்குள்’ விழுந்த குழந்தை உயிரிழப்பு!

மலசலகூடத்துக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர்க்‘கானுக்குள்’ தவறி வீழ்ந்த ஒரு வயதும் மூன்று மாதமும் நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்தச்சம்பவத்தில், முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு- கைவேலிப் பகுதியைச் சேர்ந்த சிரோன் முகேஷ்குமார் சியோன்ஷன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போதே குழந்தை, மலசலக்கூடத்துக்குள் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்க்‘கானுக்குள்’ தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *