இரு குழுக்களுக்கிடையே வாள்வெட்டு: இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு – நாவற்கேணி சந்தியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மரணவீடு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் அங்கு கடதாசி விளையாட்டில் ஈடுபட்டனர்.

இதன்போது ஏற்பட்ட பிரச்சினையின் எதிரொலியாக சம்பவதினமான நேற்று பகல் ஒரு மணியளவில் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த குழு மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் கத்திகளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இக்குழு மோதலுடன் தொடர்புபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *