இந்தோனோஷியாவுக்கு சென்ற சபாநாயகர் தலைமையிலான குழு

கொழும்பு, மார்ச் 21: சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வில் பங்கேற்க சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழு இந்தோனோஷியா பாலிக்கு சென்றுள்ளது.

நேற்று ஆரம்பமாகி எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இந்த அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த குழுவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், காவிந்த ஜயவர்தன, ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது இளைஞர்கள் தொடர்பான விடயங்கள், காலநிலை மாற்றம், உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *