எரிபொருள் பெற வந்த இளைஞர் குத்திக்கொலை!

நிட்டம்புவ – ஹொரகொல்ல பகுதியில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி, எரிபொருளை பெற்று பயணித்துக் கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை வழிமறித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *