சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் யாழில் ஒருவர் கைது!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்று, தடை செய்யப்பட்ட போதை பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளர்.

உப பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3,000 சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *