
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை அவரது ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க மறுத்துள்ளார்.
ஜனாதிபதி பாரதூரமான நெருக்கடியில் தப்பி ஓடியவர் அல்ல. இன்று நாடு எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவர் கவனம் செலுத்துகின்றார்.
நாட்டை மேலும் சீர்குலைக்கும் நோக்கில் சிலர் இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.