
நாட்டின் நிலவிவரும் டொலர் தட்டுப்பாட்டால் தண்ணீர்ப் போத்தலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருள்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் வெற்றுப் போத்தல்களின் தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் போத்தல் ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தண்ணீர் போத்தல்காரர்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒன்றரை லீற்றர் தண்ணீர் போத்தலொன்றின் விலையை 120 ரூபா வரையிலும் 5 லீற்றர் தண்ணீர்ப் போத்தலொன்றின் விலையை 300 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக இலங்கை தண்ணீர் போத்தல்காரர்களுக்கான சங்கம் தெரிவித்தது.