
நாட்டில் மக்கள் பட்டினியால் வாடும் நிலையில் இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை என யாழில் பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலை 7 மணியிலிருந்து இங்கு காத்து நிற்கின்றோம்.மக்கள் இங்கே பசி பட்டினியால் வாடுகின்றனர். வாக்கு கேட்டு வந்த அரசு எங்கே?. அரசியல் வாதிகள் எங்கே?. அண்ணன் தம்பிமார் ஆட்சியில் இருந்து கொண்டு நாடு படாத பாடு படுகிறது. அமைச்சர்களை இங்கே வரச் சொல்லுங்கள்.
மக்கள் படும் பாடு அப்போது தான் தெரியும். ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு பிரச்சினை இல்லை. கோழிக்கறியும், பியரும் குடித்து விட்டு சந்தோமாக ஏசி ரூமில் இருக்கிறார்கள்.
இந்த அரசை கீழே இறக்க வேண்டும். அவர்களை வீட்டிலே உறங்கச் சொல்லுங்கள். நாட்டை எங்களிடம் தாருங்கள் அல்லது பிரபாகரனிடம் ஒப்படையுங்கள் 24 மணி நேரத்தில் பிரச்சினையை தீர்த்து நாட்டை திருத்தி தருவார்.- என்றார்.