சர்வ கட்சி மாநாடு: தமிழ் முற்போக்கு கூட்டணியும் புறக்கணிப்பு

கொழும்பு, மார்ச் 21

சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியும் தீர்மானித்துள்ளது. பொருளாதார துறையில் மட்டுமல்லாது, சகல துறைகளிலும்நாடு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதனை அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை திருப்தி படுத்த அரசாங்கம் செய்யும் முயற்சியாகவும் கருதுவதாக மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *