ஓட்டோவை பந்தாடியது பஸ்- இருவர் காயம்!

கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற ஓட்டோ- பஸ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பயணிகளுடன் பயணித்த அரச பேருந்து, அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை மோதித் தள்ளியது.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்து, தரிப்பிடத்தில் தரிக்க முற்பட்டபோது விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டி பலமாக சேதமடைந்தது. அதில் பயணித்த இருவர் சிறுகாயமடைந்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *