
யாழ்ப்பாண நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாயில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உப பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையில் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்ய்ப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.